Wednesday, August 3, 2016

பரிசு!!

பூக்கடைக்குப் போனேன்: உன் மனத்திற்கிணைய மலரில்லை - வந்துவிட்டேன்! பொன்நகை தான் வாங்கப் போனேன்: உன் புன்னகைக்குப் பொருந்தாதென்று - வந்துவிட்டேன்! புத்தாடை வாங்கப்போனேன்: என் வானவில்லுக்கேற்ற வண்ணமில்லை - வந்துவிட்டேன்! வாழ்த்து அட்டை வாங்கப் போனேன்: உன் வாக்கின்முன் அவ்வாசகங்கள் வீணென்று - வந்துவிட்டேன்! உனக்கேற்ற ஓர்பரிசு இந்த ஞாலத்தில் இல்லையென்று ஞானம் பெற்று இங்கு வந்துவிட்டேன்! எனக்கான அரும் பரிசாய் என்வாழ்வில் வந்தவளே, உனக்கான நற் பரிசாய் நான்ஆக இதோ வந்(து)தேவிட்டேன்!!

No comments:

Post a Comment