Saturday, January 29, 2011

சல்யூட்

உள்ளூரில் பல ஆண்டுகளாக படித்துக்கொண்டே திரிந்த நான்,
வெளியூரில் பணி செய்யத் துவங்கி பல நாட்கள் ஆகிவிட்டதை,
பளிச்சென்று புரியவைத்தார் எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டி!

ஒரு நாளும் இல்லா திருநாளாய் என் முன் வந்து எனக்கு ஒரு சல்யூட்!~~
...
நாளை பெங்களூர் திரும்பும்போது அவரை 'கவனிக்க' வேண்டுமோ??!

Saturday, January 22, 2011

காரணம்??!!!

உன்னை ஏன் விரும்பினேன்?
அனுதினம் உன்னை ஏன் நினைத்தேன்?

நினைக்கக் காரணம் இருந்திருந்தால்,
மறக்கக் காரணம் கற்பித்திருப்பேன்!

காரணமே இல்லாத கவிதை அல்லவா, காதல்!

Friday, January 21, 2011

சொல்லாமலே!

என் எண்ணம் உனக்குத் தெரியும்

உனக்குத் தெரியுமென்பது எனக்கும் தெரியும்

உன்னிடம் சொல்லி விடுவேனோ என்று நான் பயந்திருந்தேன்

உன்னிடம் சொல்லுவேன் என்று நீ எதிர்பார்த்திருந்தாயோ?

சொல்லாமலே !!!!!!

தலைப்பிடத் தெரியவில்லை!

இமைகள் மூடாமல்,
இதயம் இரையாமல்,
இதழ்கள் திறவாமல்,
மௌனம் உடையாமல்,
எவரும் அறியாமல்,
பார்வையால் பேசிக்கொள்வோம்,
இல்லை.....பார்வையால் யுத்தம் செய்வோம்!
ஆஹா, அந்த நிமிடங்கள்,
நினைக்க நினைக்க நெஞ்சம் நெகிழ்கிறதே!!