Tuesday, May 24, 2011

மா நரகம் (நகரம்):

வழக்கம் போல் அலுவலகம் நோக்கி விரைந்துகொண்டிருந்தனர் மக்கள்!

அவர்களை அளவின்றி அனுமதித்து நிறைந்துகொண்டிருந்தன பேருந்துகள்!!

சாலைகளாக்கப்பட்ட சோலைகளெங்கும் கரு வண்ணம் தீட்டி, புகைந்துகொண்டிருந்தன வாகனங்கள்!!!

இவை எதனிலும் தொடர்பற்றுப் போகாமல் குறைந்துகொண்டிருந்தன எங்கள் ஆயுட்காலங்கள்!!!!

Monday, May 23, 2011

கவிதைக் கிறுக்கல்கள்!

காதல் எனக்குக் கவிதைகளை கடன் தர மறுத்தது!
கிறுக்கல்களை மட்டுமே கடிந்து கொடுத்துச் சென்றது!!
காதலால் தரப்பட்டவைகலானால்.....
கிறுக்கல்களும் கவிதைகள்தாம்! :)

Sunday, May 22, 2011

பிதற்றல் (:P)


உன்னோடு ஊர் சுற்றித் திரிந்ததில்லை,
ஊர் சுற்றும் பொழுதுகளில் உன் பிரிவை உணர்ந்திருக்கிறேன்!

உன் கரம் பற்றிப் பேசியதில்லை,
இன்னொரு நண்பன் உன் கரம் பற்றிப் பேசினால் பொறாமை கொண்டிருக்கிறேன்!!

உன்னோடு யார் பேசினாலும்,
உன்னைப் பற்றி யார் பேசினாலும்,
என் செவிகள் அதை க்ரஹிக்க மறந்ததில்லை!!!

உன் வெட்கத்துகெல்லாம் காரனமாய் இருக்க விரும்பியிருக்கிறேன்,
அதை புறக் கண்ணில் பதிவு செய்து, அகக் கண்ணில் ஆயிரம் முறை பார்த்து ரசிக்கிறேன்!!!!

உன் தோளோடு தோள் உரசிய அந்த ஒற்றை நிமிடம்,
தினம் தினம் நினைத்துப் பூரிக்கிறேன்!!

உன் கனிவான வார்த்தைகளில் களிப்புற்றது மட்டுமில்லை,
நீ உரிமையுடன் உதிர்த்த கோபத்தில் கண்ணீர் கூட சிந்தியிருக்கிறேன்!!

நீ வெட்கித் தலை குனிய, அருகில் நான் அமர்ந்து தூக்கிவிட்ட அந்த ஒற்றைப் பொழுது,
ஏழேழு பிறப்பிற்கும் உயிர் உய்யப் போதும் எனக்கு!!