Wednesday, January 15, 2014
ஆட்டோ பாடம்
நேற்று ஒரு சிறிய ஆட்டோ பயணம். கரூரில் வீட்டில் இருந்து பஸ் ஸ்டான்ட் வரை. ஆட்டோக்காரர் பழக்கப்பட்டவர். தன் மகளையும் அழைத்து வந்த்திருந்தார்.
ஆட்டோ ஏறியதும் நான் வழக்கம் போல் மொபைலில் மூழ்கினேன். ஆட்டோ ஏனோ தள்ளாடி நடக்கும் குடிமகன் போல் போனது. ஏன் என்று நான் கவனிக்காமல் வாட்ஸ் ஆப் ல் மெசேஜ்கள் தட்டிக்கொண்டிருந்தேன்.
சில இடங்களில் ஆட்டோ சற்றே நின்று போவது தெரிந்தது.. மொபைலில் இருந்து வெளி வந்து என்ன நடக்கிறதென்று பார்த்தேன்.
பொங்கலுக்காக வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த விதவிதமான கோலங்களை ஆட்டோக்காரர் தன் மகளுக்குக் காட்டிய வண்ணம் ஓட்டிக்கொண்டிருந்தார். அந்தச் சிறுமி முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி...
வாழ்வின் சிறு சிறு சந்தோஷங்களை தவறவிடுவது கூட தெரியாமல் திரியும் என் நிலை என்னை கேலி செய்தது.
மொபைலை தூர வைத்துவிட்டு, அவர்களோடு நானும் கோலங்கள் கண்டு கொண்டாடினேன்.
கடைசியாக ஒரு வீட்டின் முன் ஆட்டோ 2 நிமிடம் நின்றது. "ஐ! இத தான் சொன்னியா அப்பா?? சூப்பரா இருக்கு!" என்றாள் அந்தப் பெண்.
தரையில் கம்பீரமாக 'சோட்டா பீம்' என்னைப் பார்த்து முறுவலித்தார்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment