உன் மீதான என் காதல்,
வானவில் அல்ல, மழை நின்றதும் கலைந்துவிட!
அது வானின் நிறம் போன்றது - எந்நாளும் நிலைத்திருக்கும்!!
உன் மீதான என் காதல், கூடல் மயக்கமல்ல, கலவி முடிந்ததும் காணாமல் போக!
அது ஊடல் உற்சாகம், உறங்கவிடாது உயிர்த்திருக்கும்!!
உன் மீதான என் காதல், தாயின் பாசமல்ல சொல்லிச் சொல்லி சோர்ந்து போக!
அது சேயின் நேசம், சொல்லாவிடினும் சிறந்திருக்கும்!!
No comments:
Post a Comment